KINDLY NOTE THAT THIS BLOG IS NOT THE OFFICIAL WEB SITE OF

CEEBROS PARK RESIDENTS' ASSOCIATION.

THIS SITE REPORTS ONLY THE EVENTS AS WELL AS HAPPENING AROUND THE CEEBROS PARK.

Friday, February 27, 2009

Monday, February 23, 2009

ஆனை பாரு யானை பாரு


Courtesy: Madam Kavinaya
Courtesy: http://kavinaya.blogspot.com
ஆனை பாரு யானை பாரு
ஆடி அசைஞ்சு வருது பாரு!
கறுப்பு யானை கம்பீ ரமா
நாட்டை நோட்டம் விடுது பாரு!

தூணைப் போலக் காலைப் பாரு
நீண்ட தும்பிக் கையைப் பாரு!
முறத்தைப் போலக் காதைப் பாரு
விசிறி வீசும் அழகைப் பாரு!

மலையைப் போல உடம்பைப் பாரு
கடுகைப் போலக் கண்ணைப் பாரு!
குட்டிக் குட்டி வாலைப் பாரு
குனிய வச்சு ஏறிப் பாரு!

நீரை உறிஞ்சிக் குளிக்கும் பாரு
பூவாய்ச் சொரிந்து களிக்கும் பாரு!
வாழைப் பழத்தைக் கொடுத்துப் பாரு
வாகாய் உரிச்சுத் தின்னும் பாரு!

கழுத்தில் மணியைக் கட்டிப் பாரு
காத தூரம் கேட்கும் பாரு!
பிள்ளை யாரு முகத்தைப் பாரு
உள்ளம் துள்ளிக் குதிக்கும் பாரு!

ஆனை யோட பலத்தைப் பாரு
தும்பிக் கையில் இருக்கு பாரு!
நீயும் கொஞ்சம் உள்ளே பாரு
நம்பிக் கையில் தெரியும் பாரு!!


--கவிநயா

எழுதியவர் கவிநயா at 8:30 PM 9 கருத்துகள்

Sunday, February 22, 2009

Saturday, February 21, 2009

Wednesday, February 18, 2009

(பழமுதிர் சோலையிலே


PLEASE CLICK AT THE TITLE TO LOG OF MRS.RAGINI'S BLOG
A good song by Madam Ragini
Courtesy: Madam Ragini
பழமுதிர் சோலையிலே குடி கொண்ட வேல் முருகா
பழமுதிர் சோலையிலே குடி கொண்ட வேல் முருகா
உன்னை காண்பதற்கு பக்தர்கள் காத்திருக்க(2)
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை

(பழமுதிர் சோலையிலே)

துண்பங்கள் வந்திடுனும் காத்திடும் திருக்குமரா
வறுமை பிடியினிலும் நீக்கடிடும் குருபரனே (2)
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை

(பழமுதிர் சோலையிலே)

முக்கனி முத்தமிழில் சிரித்த முகம் தனிலே
முக்கனி முத்தமிழில் சிரித்த முகம் தனிலே
குளிர்ந்த பார்வையும் உன்கெண்ட வேல் முருகா
குளிர்ந்த பார்வையும் உன்கெண்ட வேல் முருகா
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை
(பழமுதிர் சோலையிலே




Please log on to : http://pakthikeetham.blogspot.com/2009/01/blog-post_6031.html
to listen to other songs of Madam Ragini

Monday, February 16, 2009

Nursery Rhymes for Ceebros Park Children

Hi Sarveswar !
Hi Adhithya ! Hi Sadvik ! Hi Sajni ! Hi Shivani !! Hi pranav !!
And others too of our Ceebros park.
Pranav invites u all to see and enjoy

Here u see some nursery rhymes !!







Wednesday, February 11, 2009

ஆறைப் போல ஓடுதம்மா



Madam Kavinaya sings a song in ecstacy . I have only tried to compose this song in Raag Desh.
Warning: Don't look at the face of this old man. It is likely you will miss the wonderful song of Madam Kavinaya.
Kindly log on to her blog : http://ammanpaattu.blogspot.com

ஆறைப் போல ஓடுதம்மா - மனம்
திசைகள் எல்லாம் அலையுதம்மா
கடலாம் உன்னைச் சேர மறந்து
பாதை தவறிப் போகுதம்மா

ஆற்றின் பாதை வகுத்திடுவாய் - அதன்
அறிவை உன்மேல் திருப்பிடுவாய்
போற்றி உன்னைப் பணிகின்றேன் - என்னை
ஏற்று அபயம் அளித்திடுவாய்

காற்றாய் என்னில் கலந்திடுவாய் - நெஞ்சில்
கனலாய் நின்று கனன்றிடுவாய்
ஊற்றாம் உந்தன் கருணையில் ஒருதுளி
என்மேல் தெறித்திடச் செய்திடுவாய்

நாற்றாய் உன்னை நட்டு விட்டேன் - நீ
கதிராய் வளர்ந்து நலம் தருவாய்
சேறாய்க் குழம்பிய எந்தன் மனதில்
செந்தாமரையாய் மலர்ந்திடுவாய்!


--கவிநயா