KINDLY NOTE THAT THIS BLOG IS NOT THE OFFICIAL WEB SITE OF
CEEBROS PARK RESIDENTS' ASSOCIATION.
THIS SITE REPORTS ONLY THE EVENTS AS WELL AS HAPPENING AROUND THE CEEBROS PARK.
SAFEST WEBSITE FOR INDIAN CHILDREN
Monday, December 22, 2008
அகமூறும் அன்பாலே அழைக்கின்றோம் அம்மா
The prayer song is set to raag Punnaga varali.
CourtesY; Madam Kavinaya.
Please log on to:
http://ammanpaattu.blogspot.com
அகமூறும் அன்பாலே அழைக்கின்றோம் அம்மா
முகமூறும் நகை காட்டி குளிர்விப்பாய் அம்மா
தினந்தோறும் உன்நினைவில் திளைக்கின்றோம் அம்மா
மனந்தோறும் நீயிருந்து மகிழ்விப்பாய் அம்மா
நாள்தோறும் நாள்தோறும் உன்னருளை நாடி
வாயார மனமார உன்புகழைப் பாடி
உனைத்தேடி வருகின்ற பக்தர்பல கோடி
கருணைசெய்ய வரவேணும் நீயிங்கு ஓடி
மெல்லிதழை யொத்தசெம் மலர்ப்பதங்கள் சரணம்
தெள்ளுதமி ழேத்துகின்ற தீம்பதங்கள் சரணம்
தத்திநடை பழகுகின்ற தளிர்ப்பதங்கள் சரணம்
நித்தம்எமைக் காக்கின்ற பொற்பதங்கள் சரணம்
முத்துமணி நூபுரங்கள் கொஞ்சும்பதம் சரணம்
முத்தொழிலும் ஆற்றுகின்ற முதல்விபதம் சரணம்
பித்தனுடன் நடனமிடும் பிச்சிபதம் சரணம்
பக்தர்களைப் பேணுகின்ற அற்புதையே சரணம்!
--கவிநயா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment