KINDLY NOTE THAT THIS BLOG IS NOT THE OFFICIAL WEB SITE OF

CEEBROS PARK RESIDENTS' ASSOCIATION.

THIS SITE REPORTS ONLY THE EVENTS AS WELL AS HAPPENING AROUND THE CEEBROS PARK.

Monday, October 27, 2008

Sunday, October 26, 2008

Tuesday, October 21, 2008

நெஞ்சுக்குள்ள ஒன் நெனப்பு

ஆனந்த பைரவியிலே ஆனந்தமா ஒரு பாட்டு !!

அந்தக்கால கவி காளமேகமே கவிநயா என்ற புனைப் பெயரில்
பாட்டு எழுதுகிறாரோ ?

என்ன சுகமான பாட்டு ? இதை ஆனந்த பைரவியிலே பாடும்போதே
ஒரு தனி சுகம்..

இந்தப்பாட்டிலே என்ன விசேஷம்னு கேட்டா, இது எல்லா
சிசுவேஷன்சுக்கும் பொருந்தரது.

என்னென்னன்னு என்னைக் கேட்கக்கூடாது..





http://uk.youtube.com/watch?v=lI9X_r6p9Mg


கண்ணுக்குள்ள ஒன்னுருவம்
கலையாம நிக்குதடி
நெஞ்சுக்குள்ள ஒன் நெனப்பு
நீங்காம சுத்துதடி

சொல்லச் சொல்ல ஒம்பேரு
சக்கரையா ருசிக்குதடி
மெல்ல மெல்ல ஒன்னழகில்
எம் மனசு சொக்குதடி

கைவளயல் கலகலத்து
கானம்பாடிக் களிக்குதடி
கால்கொலுசு சலசலத்து
சங்கீதமா ஒலிக்குதடி

சின்னஇதழ்ச் சிரிப்பினிலே
சிந்தையெல்லாம் மயங்குதடி
தந்தனத்தாந் தமிழ்ப்பாட்டு
தானாகப் பொறக்குதடி
Kindly log on to:

--கவிநயா

For Our Listeners a Deepavali Bonus
Madurai Somu sings the highly popular kirthan
Ksheera Sagara..in Raag anandha Bhairavi


04-Ksheerasagara-A...

Tuesday, October 7, 2008

Saraswathi Stotram recited by Agasthya Munivar






This is the conventional traditional SARASWATHI PUJA STOTRAM being recited
in every home during Saraswathi puja day as well as on the day when we start learning a new subject. Infants and children are traditionally tutored to learn this stotram even during their infancy - childhood and get it by heart.

Friday, October 3, 2008

தாமரைப் பூவினில் வீற்றிருப்பாய் அம்மா




Please click at the title or cut and paste the URL below: to move on to blog:
http://kavinaya.blogspot.com

தாமரைப் பூவினில் வீற்றிருப்பாய் அம்மா
தங்கத்தைப் போலே ஜொலித்திருப்பாய்
வாமனனாம் அந்த மாதவன் மார்பினில்
வாசனை மலராய் முகிழ்த்திருப்பாய்
http://kavinaya.blogspot.com

மலரும்உன் வதனமும் ஒன்றெனவேமது
வண்டுகளும் மயங்கும் விந்தையென்ன?
வளரும் நிலவும்உன் முகமதி கண்டபின்
தயங்கித் தானும் தேய்வதென்ன?

கதி ரொளியோஉன் கண்ணொளி எனவே
கமலங்கள் இரவிலும் மலர்வதென்ன?
குழ லொலியோஉன் குரலொலி எனவே
கோகிலங் களும்தலை குனிவதென்ன?

தங்களினம் என்றெண்ணி அன்னங்களும் உன்னுடைய
மெல் லடி களைப்பின் தொடர்வதென்ன?
உந்த னிடை கண்டபின் கானகத்து கொடிகளும்
நாணம் கொண்டு இன்னுமே மெலிவதென்ன?

உன் னெழில் முகம் என் சிந்தையிலே வேண்டும்
உன் புகழ் தினம் நான் பாடிடவே வேண்டும்
உந்தன் அருட் பார்வை எந்தன் திசையினிலே வேண்டும்
உன்னிடத்தில் அகலாத அன்பெனக்கு வேண்டும்!

MAY GODDESS LAKSHMI AS ALSO
GODDESS SARASWATHI BLESS MADAM KAVINAYA AND HER FAMILY MEMBERS AND FRIENDS WITH ALL THAT THEY RICHLY DESERVE.