அந்தக்கால கவி காளமேகமே கவிநயா என்ற புனைப் பெயரில்
பாட்டு எழுதுகிறாரோ ?
என்ன சுகமான பாட்டு ? இதை ஆனந்த பைரவியிலே பாடும்போதே
ஒரு தனி சுகம்..
இந்தப்பாட்டிலே என்ன விசேஷம்னு கேட்டா, இது எல்லா
சிசுவேஷன்சுக்கும் பொருந்தரது.
என்னென்னன்னு என்னைக் கேட்கக்கூடாது..
http://uk.youtube.com/watch?v=lI9X_r6p9Mg
கண்ணுக்குள்ள ஒன்னுருவம்
கலையாம நிக்குதடி
நெஞ்சுக்குள்ள ஒன் நெனப்பு
நீங்காம சுத்துதடி
சொல்லச் சொல்ல ஒம்பேரு
சக்கரையா ருசிக்குதடி
மெல்ல மெல்ல ஒன்னழகில்
எம் மனசு சொக்குதடி
கைவளயல் கலகலத்து
கானம்பாடிக் களிக்குதடி
கால்கொலுசு சலசலத்து
சங்கீதமா ஒலிக்குதடி
சின்னஇதழ்ச் சிரிப்பினிலே
சிந்தையெல்லாம் மயங்குதடி
தந்தனத்தாந் தமிழ்ப்பாட்டு
தானாகப் பொறக்குதடி
Kindly log on to:
--கவிநயா
For Our Listeners a Deepavali Bonus
Madurai Somu sings the highly popular kirthan
Ksheera Sagara..in Raag anandha Bhairavi
04-Ksheerasagara-A... |
1 comment:
வீட்டுக்கு போய்தான் பாட்டு கேக்கணும்.. ஆனா அதுக்குள்ள இது என்னன்னு தெரிஞ்சுக்க ஆவல்..
//இந்தப்பாட்டிலே என்ன விசேஷம்னு கேட்டா, இது எல்லா
சிசுவேஷன்சுக்கும் பொருந்தரது.//
சரியா புரியல. விளக்குங்களேன்...
Post a Comment