
A prayer song by Madam Kavinaya in her blog
http://ammanpaattu.blogspot.com is composed in two raagas Sahana and Bahudari.
FIRST IN RAAG BAHUDARI
In case u are not getting the music continously please cut and paste the URL below:
http://www.youtube.com/watch?v=lHEl1X64TXM
http://www.youtube.com/watch?v=5JKSdBwQMuw
வேண்டுவது ஏதுமில்லை அம்மா
உன்னிடத்தில்
வேண்டுவது ஏதுமில்லை அம்மா
உந்தன்திரு வடிகளிலே
அகலாத அன்பையன்றி
வேண்டுவது ஏதுமில்லை அம்மா
வெண்தா மரையின் மேலே
வீற்றிருக்கும் வெண் மதியே
வேண்டும் வரம் யாவையுமே
அள்ளித் தருவாய் என்றாலும்
வேண்டுவது ஏதுமில்லை அம்மா
செந்தா மரையின் மேலே
சிரிக்கின்ற பெண் மயிலே
அன்னையாக நீ இருந்து
அன்பை அள்ளித் தருகையிலே
வேண்டுவது ஏதுமில்லை அம்மா
சிம்மத்தின் மீ தமர்ந்து
சூரியனாய் ஜொலிப்ப வளே
சிந்தையி லே நிறைந்து
செந்தேனாய் இனிப் பவளே
வேண்டுவது ஏதுமில்லை அம்மா
உன்னிடத்தில்
வேண்டுவது ஏதுமில்லை அம்மா
1 comment:
இரண்டு ராகங்களுமே மிக அழகாக அமைந்திருக்கின்றன. மிக்க நன்றி தாத்தா.
Post a Comment